search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் கனமழை- பா.ஜ.க. எம்.பி. நடிகர் ஜக்கேஷ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது
    X

    நடிகர் ஜக்கேஷ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதை படத்தில் காணலாம்.


    கர்நாடகாவில் கனமழை- பா.ஜ.க. எம்.பி. நடிகர் ஜக்கேஷ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது

    • கர்நாடக மாநிலம் முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
    • துமகூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சன்னபட்னா தாலுகாவில் உள்ள திட்டமாரனஹள்ளி ஏரி உடைந்து 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஏராளமான கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. கடந்த 30 ஆண்டுகளில் ஹொங்கனூர் ஏரியின் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

    அட்டா பிடாடி ஹோபாலி ஐனோரபாளையம் அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் தண்ணீர் ஓடி ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. பரசனபல்ய கிராமம் அருகே உள்ள சிக்கஹோளே என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அக்கிராமத்தின் இணைப்புச் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மத்தூரில் உள்ள ஷின்ஷா நதி ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாண்டியா தாலுக்காவின் பல்வேறு கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கர்நாடக மாநிலம் முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. துமகூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் நடிகர் ஜக்கேஷ். இவரது செந்த ஊர் துமகூரு மாவட்டம் மாயச்சந்திரா கிராமம் ஆகும். அவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. துமகூருவில் இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு மாயச்சந்திரா கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    அதுபோல் ஜக்கேசின் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சேதமானது. இதுதொடர்பான புகைப்படத்தை ஜக்கேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மழைநீர் வடிகால் பகுதியில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதே வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    Next Story
    ×