search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வீடு புகுந்து பலாத்காரம் செய்ததால் கர்ப்பம்: சிறுமிக்கு தாலி கட்ட வேண்டிய நேரத்தில் வாலிபர் ஓட்டம்
    X

    வீடு புகுந்து பலாத்காரம் செய்ததால் கர்ப்பம்: சிறுமிக்கு தாலி கட்ட வேண்டிய நேரத்தில் வாலிபர் ஓட்டம்

    • 2 மாதங்களுக்கு பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • பஞ்சாயத்தில் சிறுமிக்கு சிவக்குமார் ரூ.10 ஆயிரம் தருவதாகவும், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் செந்துலுடுவை சேர்ந்த சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கிராம தன்னார்வலராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு அவரது பாட்டி வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த சிவகுமார் சிறுமியிடம் ஆதார் அட்டை கேட்டு வீட்டிற்குள் சென்றார்.

    அப்போது வலுக்கட்டாயமாக சிறுமியை பலாத்காரம் செய்தார். 2 மாதங்களுக்கு பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் தாய் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். சிறுமியை பரிசோதித்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செய்தார்.

    பஞ்சாயத்தில் சிறுமிக்கு சிவக்குமார் ரூ.10 ஆயிரம் தருவதாகவும், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வந்தது. 2 பேரின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் குவிந்தனர்.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிவக்குமார் கலந்து கொண்டார். அதிகாலை திருமண மேடைக்கு வரவேண்டிய சிவக்குமார் தலைமறைவானார்.

    நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சிவக்குமார் அங்கு காணவில்லை.

    மாப்பிள்ளையை பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமண களைகட்டி இருந்த வீடு சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×