என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அகமதாபாத்தில் அதிர்ச்சி சம்பவம்: கொள்ளையடித்த வீட்டில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்
- செல்போன்கள் இல்லாததால் ஆதரவற்று தவித்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசை தொடர்பு கொண்டு புகார் செய்தனர்.
- கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9-வது மாடியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் ஒரு கொள்ளை கும்பல் புகுந்தது. அவர்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு உள்ளே புகுந்து அந்த பெண்ணை தாக்கி கட்டி போட்டனர்.
பின்னர் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், லேப்டாப் மற்றும் செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றையும், காரையும் கொள்ளையடித்துள்ளனர்.
சத்தம் கேட்டு அங்கு சென்ற 19 வயதான வீட்டு பணிப்பெண்ணை கொள்ளை கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் 2 பெண்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
செல்போன்கள் இல்லாததால் ஆதரவற்று தவித்த அந்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசை தொடர்பு கொண்டு புகார் செய்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு பக்கத்து மாவட்ட போலீசாரையும் உஷார் படுத்தினர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் கொள்ளை கும்பல் பஞ்சாப் நோக்கி தப்பி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது ஒரு பஸ்சில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றொரு வாலிபர் உத்தரபிரதேசத்தையும், ஒரு வாலிபர் மத்திய பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 5 பேரும் காவலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
தீபாவளிக்கு விடுமுறையில் ஊருக்கு செல்வதற்கு முன்பாக கொள்ளையடிக்க திட்டம் தீட்டி அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டதும், அப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பெண் தனியாக வசித்து வருவதையும் அறிந்து அவரது வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்