search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் ஒரே நாளில் 2 லட்சம் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் வினியோகம்
    X

    திருப்பதியில் ஒரே நாளில் 2 லட்சம் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் வினியோகம்

    • திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
    • கவுண்டர்கள் திறக்கப்பட்ட ஒரே நாளில் 4 நாட்களுக்கான 2 லட்சம் தரிசன டிக்கெட் வினியோகிக்கப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் ரூ 300 ஆன்லைன் டிக்கெட் மற்றும் இலவச தரிசன நேர டோக்கன் பெற்ற பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    நாளை அதிகாலை முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என அறிவித்து இருந்த நிலையில் நேற்று பகல் 1.30 மணி அளவில் முன்கூட்டியே சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    கவுண்டர்கள் திறக்கப்பட்ட ஒரே நாளில் 4 நாட்களுக்கான 2 லட்சம் தரிசன டிக்கெட் வினியோகிக்கப்பட்டது.

    தினமும் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் 11-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். அந்தந்த நாட்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்கப்பட்டு வருவதால் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே அன்றைய தரிசனம் டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்குவதை நிறுத்தி அன்றே வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 78,460 பேர் தரிசனம் செய்தனர். 29,182 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.03 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    Next Story
    ×