உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களுக்கு அரசு செலவில் இந்தியாவில் படிக்க வாய்ப்பு- திக்விஜய சிங் கோரிக்கை

உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்காக மாணவர்களின் குடும்பங்கள் ஏற்கனவே நிறைய பணம் செலவழித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி திக்விஜய சிங்
காங்கிரஸ் எம்.பி திக்விஜய சிங்
Published on

இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களுக்கு அரசு செலவிலேயே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி திக் விஜய சிங் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி திக்விஜய சிங் மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வந்த மாணவர்கள், போர் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாணவர்களின் குடும்பங்கள் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்காக ஏற்கனவே நிறைய பணம் செலவழித்துள்ளனர்.

அதனால், உக்ரைனில் இருந்நு திரும்பிய மாணவர்களை இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும். மேலும், அத்தகைய மாணவர்களின் கட்டணத்தை அரசாங்கமே செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com