

விபத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டருக்குள் இருந்தவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் பயணித்தது தெரியவந்தது. இதில் ஒரு விமானி உயிரிழந்ததாகவும், மற்றொரு விமானி படுகாயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.