தமிழில் பதவி ஏற்றுக் கொண்ட தமிழக எம்.பி.க்கள்

வாழ்க ஜனநாயகம், வாழ்க அரசியல் சாசனம் எனக்கூறி உறுதிமொழி எடுத்த திருமாவளவன்.வேண்டாம் நீட், Ban நீட் என முழக்கமிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார் தாயநிதி மாறன்.
தமிழில் பதவி ஏற்றுக் கொண்ட தமிழக எம்.பி.க்கள்
Published on

18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்க பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறது.

நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று 2-வது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது.

தமிழக எம்.பி.க்கள் வரிசையாக இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர்.

திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில் கையில் அரசியலமைப்பு புத்தகத்தின் தமிழில் பதவி ஏற்றார்.

அதன்பின் முன்னாள் தமிழக அமைச்சர் வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டார்.

தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கையில் அரசியலைப்பு புத்தகத்துடன் பதவி ஏற்றுக் கொண்டார்.

மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பதவி ஏற்ற்றார். பதவி ஏற்றபின் பின் தயாநிதி மாறன் வேண்டாம் நீட், Ban நீட் என முழக்கிமிட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதவி ஏற்கும்போது ஜனநாயகம் வாழ்க. அரசியலமைப்பு வாழ்க என்றார்.

 கனிமொழி எம்.பி. பதவி ஏற்கும்போது அரசியலமைப்பு வாழ்க முழக்கமிட்டு பதவி ஏற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com