search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் 10 வயது மகனை வெட்டி கொன்ற தந்தை
    X

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் 10 வயது மகனை வெட்டி கொன்ற தந்தை

    • மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்த தாய் சுஜாதா கதறி துடித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஒய் எஸ் ஆர் மாவட்டம் அஸ்தலிங்கய்ய பள்ளியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி சுஜாதா. தம்பதிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 2 மகன்கள் இளைய மகன் சோமேஸ்வர ரெட்டி (வயது 10). இவர் அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சிவசங்கர் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் 2-வது மகனை கொலை செய்ய முடிவு செய்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை சிறுவன் சோமேஸ்வர ரெட்டி வீட்டில் ஒரு அறையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.

    அப்போது சிவசங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த மகனை சரமாரியாக வெட்டினார்.

    இதனால் சோமேஸ்வர ரெட்டி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். மகனின் அலறல் சத்தம் கேட்ட தாய் சுஜாதா மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

    சோமேஸ்வர ரெட்டி ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து தாய் கண் முன்னே பரிதாபமாக இறந்தான்.

    அதற்குள் சிவசங்கர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்த தாய் சுஜாதா கதறி துடித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து சோமேஸ்வர ரெட்டியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×