search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா நாளை குஜராத்தில் ரோடு ஷோ
    X

    அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா நாளை குஜராத்தில் ரோடு ஷோ

    • கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார்.
    • குஜராத்தில் இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மக்களவை தேர்தலில் அவரால் பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை. அவரது மனைவி சுனிதா, டெல்லி மாநில அமைச்சர்களுக்கு கெஜ்ரிவால் வழங்கும் ஆலோசனைகள் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் நாளை குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அம்மாநிலத்தில் பரூச் மற்றும் பவ்னாநகர் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார்.

    டெல்லியில் உள்ள கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மாநிலங்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி ராம்லீலா ஜந்தர் மந்தரில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மாபெரும் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×