search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிசயம் ஆனால் உண்மை... 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த பள்ளி மாணவன்
    X

    அதிசயம் ஆனால் உண்மை... 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த பள்ளி மாணவன்

    • சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவனை பாம்பு கடித்தது.
    • கடந்த 27-ந்தேதி 9-வது முறையாக பிரஜ்வலை பாம்பு கடித்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்-உஷா தம்பதியின் மகன் பிரஜ்வல் (வயது 14). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி பிரஜ்வல் வீட்டு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்றான். அப்போது ஒரு பாம்பு அவனை கடித்தது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவனை பாம்பு கடித்தது. இவ்வாறு அவனை தொடர்ந்து 6 முறை பாம்பு கடித்தது. 3 முறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமான பிரஜ்வல் 3 முறை நாட்டு மருந்து சிகிச்சையும் எடுத்து உள்ளான். இதனால் பயந்துபோன அவனது பெற்றோர் சித்தாப்பூருக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அதன் பின்னரும் 2 முறை பாம்பு சிறுவன் பிரஜ்வலை கடித்துள்ளது. அதற்கும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி 9-வது முறையாக பிரஜ்வலை பாம்பு கடித்தது. தற்போது அவன் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். தற்போது அவன் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுவரை அந்த பாம்பை பிரஜ்வலை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. இதையடுத்து விஜயகுமார்-உஷா தம்பதி, நாக தேவதைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளனர். 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×