search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாதவிடாய் - ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியமில்லை என்கிறார் ஸ்மிருதி
    X

    "மாதவிடாய்" - ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியமில்லை என்கிறார் ஸ்மிருதி

    • மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு பீகார்.
    • கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு.

    இந்தியாவில் பீகார் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புகள் அறிவிக்கப்பட்டது. பீகார் அரசின் இந்த அறிவிப்பு அன்றைய காலத்தில் பெரும்புரட்சியாக பார்க்கப்பட்டது. மேலும் இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு என்ற பெருமையையும் பீகார் பெற்றது.

    அதேபோல் ஜன 19, 2023 கேரள அரசு, உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. நாட்டிலேயே முதல்முறையாக கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுப்பு அறிவிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றது.


    இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் குமார் ஜா, பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்புகளை வழங்குவதற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது,

    'இன்றைய நிலையில் பெண்கள் அதிகளவிலான பொருளாதார வாய்ப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். இந்த விஷயத்தில் நான் எனது தனிப்பட்ட கருத்தை மட்டும் பதிவு செய்கிறேன். மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு அல்ல, அது ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தின் இயல்பான பகுதியாகும்.'

    'மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே. மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது தேவையற்றது'என்று அவர் கூறினார்.

    மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கைக்கு ஒரு பெண் மத்திய அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×