தெலுங்கானாவுக்கு வருகிறது சிங்கப்பூர் பீர்

சிங்கப்பூரில் பிரபலமான டைகர் பீர் தெலுங்கானாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
தெலுங்கானாவுக்கு வருகிறது சிங்கப்பூர் பீர்
Published on

தெலுங்கானா மாநில அரசின் நடத்தை காரணமாக பீர் விநியோகத்தை நிறுத்துவதாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இங்குள்ள பீர்களுக்கு பதிலாக புதிய நிறுவன பீர்களை அறிமுகப்படுத்த மாநில அரசு முயற்சித்து வருகிறது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் நடந்த உயர்மட்ட பரிசீலனையில் ஏற்கனவே பல பரிந்துரைகள் பெறப்பட்டது.

சிங்கப்பூரில் பிரபலமான டைகர் பீர் தெலுங்கானாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சிங்கப்பூர் செல்ல உள்ளார். டைகர் பீர் நிறுவன பிரதிநிதிகளை அவர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

தெலுங்கானாவில் டைகர் பீர் வந்தால் அதிக அளவில் விற்பனை நடக்கும். இதனை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மது வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டைகர் பீர் நிறுவனம் சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக அளவு சலுகை அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் அங்குள்ள குடிமகன்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com