ஏரி மீன்களை அழிக்கும் வளர்ப்பு தங்க மீன்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நிஞ்சா வகை ஆமைகள் சென்னையின் ஏரிகளை ஆக்கிரமித்துள்ளன.அதிக பராமரிப்பு தேவையில்லை மற்றும் பாசி வளர்ச்சியை சாப்பிட்டு தொட்டியை சுத்தமாக வைத்திருக்கும்.
ஏரி மீன்களை அழிக்கும் வளர்ப்பு தங்க மீன்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Published on

திருப்பதி:

வீடுகளில் செல்ல பிராணியாக கண்ணாடி தொட்டிகளில் சிறிய வகையான வண்ண வண்ண மீன்கள் ஆசை ஆசையாக வளர்க்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த வகையான மீன்களை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் மீன்கள் குறித்து ஐதராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் ஆராய்ச்சியாளர் கோபி கிருஷ்ணா ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

தங்க மீன்கள் மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கேட் பிஸ் என்று அழைக்கப்படும் டேங்க் கிளீனர் இந்தியாவில் உள்ள மீன் வளர்ப்பு ஆர்வலர்களிடையே பிரபலமாக உள்ளது ஏனெனில் அதிக பராமரிப்பு தேவையில்லை மற்றும் பாசி வளர்ச்சியை சாப்பிட்டு தொட்டியை சுத்தமாக வைத்திருக்கும்.

ஒருவேளை மீன் வளர்ப்பவர்கள் மீன் வளர்க்க தேவையில்லை என்ற முடிவு செய்தால் அவர்கள் வளர்த்துள்ள தங்க மீன்களை அருகில் உள்ள ஏரி குளங்களில் விட்டு விடுகின்றனர்.

2 அடி அங்குலத்தில் ஏரி குளங்களில் விடப்படும் வளர்ப்பு மீன்கள் அடுத்த 2 மாதங்களில் விரைவாக அசுர வளர்ச்சி பெற்று 2 அடி நீளம் வரை வளர்ந்து விடுகிறது. மேலும் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து விடுகின்றன.

இதனால் ஏரி குளங்களில் உள்ள உள்ளூர் மீன்களை அழித்து விடுகிறது. நிஞ்சா வகை ஆமைகள் சென்னையின் ஏரிகளை ஆக்கிரமித்துள்ளன,

இப்போது மற்ற தென் மாநிலங்களில் உள்ளூர் நீர் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சத்திற்காக மாறி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com