search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் ஆளுநருக்கு எதிராக கல்லூரிகளில் பேனர்களை வைத்த எஸ்.எஃப்.ஐ.
    X

    கேரளாவில் ஆளுநருக்கு எதிராக கல்லூரிகளில் பேனர்களை வைத்த எஸ்.எஃப்.ஐ.

    • கேரள மாநில ஆளுநர் பல்கலைக் கழகங்களுக்காக பணிபுரிய வேண்டும்.
    • சர் பரிவார்களுக்காக அல்ல என எஸ்.எஃப்ஐ போராட்டம் நடத்தி வருகிறது.

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையான அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் அரசால் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் வழங்காமல் இருப்பதாக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் பிரிவான எஸ்.எஃப்.ஐ., துணைவேந்தரான ஆளுநர் பல்கலைக்கழங்களுக்காக பணிபுரிய வேண்டும். சங் பரிவார்களுக்காக அல்ல என போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் என்னை தாக்க சதி செய்கிறார் என ஆளுநர் ஆரிஃப் முகமது கான் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் துணைவேந்தரான ஆளுநர் பல்கலைக்கழங்களுக்காக வேலை செய்ய வேண்டும். சங் பரிவார்களுக்காக அல்ல என்பதை வலியுறுத்தி மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேனர்கள் வைக்கப்படும் என எஸ்.எஃப்.ஐ. தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில்தான் அரசு சமஸ்கிருத கல்லூரிக்கு வெளியே பேனர் வைத்துள்ளனர். கவர்னர் தங்கியுள்ள பலைக்கலைகழகத்தின் விருந்தினர் மாளிகை அருகிலும் பேனர் வைத்திருந்தனர். அதனை போலீசார் அகற்றினர்.

    நேற்று பேனர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவற்றை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இங்கு தங்கியிருந்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில பேனர் வைத்திருக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×