search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரகாண்ட் சுரங்கம் விபத்து: மீட்பு பணியில் மீண்டும் சிக்கல்- தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
    X

    உத்தரகாண்ட் சுரங்கம் விபத்து: மீட்பு பணியில் மீண்டும் சிக்கல்- தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

    • சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இன்றுடன்11 நாட்களாக நடைபெற்று வருகிறது.
    • இதுவரை சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.

    அவர்களை மீட்கும் பணி இன்றுடன்11 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் நேற்று தொடங்கப்பட்டது.

    இன்னும் சில மணி நேரங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்டுவிடலாம் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இதுவரை சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்ட நிலையில், மீட்பு பணி மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×