என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
காரக்பூரில் ஐஐடி மாணவர் தற்கொலை- விடுதி அறையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
- மாணவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
- சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரக்பூர்:
மேற்கு வங்காள மாநிலம் காரக்பூரில் உள்ள ஐஐடி விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுதி அறையில் அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
அந்த மாணவர், அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், சமீபத்தில் விடுதியில் சேர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகங்களில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி சென்னை ஐஐடியில் ஒரு மாணவர், 17ம் தேதி கவுகாத்தி ஐஐடியில் ஒரு மாணவர் என இறந்துள்ளார். இதேபோல் ஐதராபாத், கான்பூரிலும் கடந்த மாதம் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்