ரகசியங்கள் லீக் ஆகும்.. அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தடை

ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தடை செய்துள்ளன.சாம் ஆல்ட்மேன் இந்தியா வருகை தந்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார்.
ரகசியங்கள் லீக் ஆகும்.. அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தடை
Published on

உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ உருவாக்கிய சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கார்க் ஏஐ ஆகியவற்றுடன் தற்போது சீனாவின் டீப்சீக் ஏஐ புதிதாக அறிமுகமாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சாட்ஜிபிடி, டீப் சீக் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களை அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.

இவற்றால் அரசின் பாதுகாக்கப்பட்ட தரவுகள், ஆவணங்கள் ஆகியவற்றின் ரகசியத்தன்மை சீர்குலையும் அபாயம் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி டீப்சீக் பயன்பாட்டை தடை செய்துள்ளன.

இதற்கிடையே சாட்ஜிபிடி உடைய தாய் நிறுவனமான ஓபன் ஏஐ  சிஇஓ சாம் ஆல்ட்மேன்  இந்தியா வருகை தந்துள்ள நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com