search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்களவை தேர்தல்: ஐக்கிய ஜனதா தள வேட்பாளரை அறிவித்தார் நிதிஷ்குமார்
    X

    மாநிலங்களவை தேர்தல்: ஐக்கிய ஜனதா தள வேட்பாளரை அறிவித்தார் நிதிஷ்குமார்

    • பீகாரில் பா.ஜ.க. மற்றும் ஜனதா தளம் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
    • மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    பாட்னா:

    மாநிலங்களவை தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற இருக்கிறது.

    இதற்கிடையே, பீகாரில் 6 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கிறது.

    இதற்கிடையே, பீகாரில் பா.ஜ.க. சார்பில் தர்மஷீலா குப்தா மற்றும் பீம் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பீகாரில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் சஞ்சய் குமார் ஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கட்சி தலைவர் நிதிஷ்குமார் அறிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×