search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே பாலின திருமணம் ஒருநாள் நிஜமாகும்: இந்திய வீராங்கனை சொல்கிறார்
    X

    ஒரே பாலின திருமணம் ஒருநாள் நிஜமாகும்: இந்திய வீராங்கனை சொல்கிறார்

    • ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
    • இல்லாத சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது என மூன்று நீதிபதிகள் தீர்ப்பு

    ஒரே பாலின திருமணம் தொடர்பான வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது 3 நீதிபதிகள் (பெரும்பாலான நீதிபதிகள்) ''ஒரே பாலின திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்றம்தான் முடிவ செய்ய வேண்டும்.

    இல்லாத சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. எனவே ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை'' எனத் தீர்ப்பு அளித்தனர்.

    இதனால் இந்தியாவில் ஒரே பாலினத்தினர் திருமணம் செல்லத்தக்கது அல்ல நிலை அப்படியே தொடர்கிறது. இந்த தீர்ப்பை வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையும், அதிவேக ஓட்டப் பந்தய வீராங்கனையுமான டூட்டி சந்த், ஒரே பாலின திருமணம் குறித்து கூறியதாவது:-

    ஒரே பாலினத்தினர் சேர்ந்து வாழ்வதை உச்சநீதிமன்றம் தடுக்கவில்லை. அரசியல் சட்டம் அதற்காக இல்லை. இதனால் உச்சநீதிமன்றம் அதில் தலையிடவில்லை. எதிர்காலத்தில் ஒரே பாலினத்தினர் திருமணம் செய்யும் வகையில், முறையான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசும், பாராளுமன்றமும் உறுதியாக ஆலோசனை செய்யும் என நாங்கள் நம்புகிறோம்.

    இது மனித குலத்தின் பிரச்சினை. வாழ்வில் அனைவருக்கும் சரியான உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்தியாவில் விதவை பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்காக ஏதும் வழங்கப்பட்டதா?. ஒரே பாலின திருமணம் ஒருநாள் நம் நாட்டில் அனுமதிக்கப்படும்'' என்றார்.

    கடந்த ஐந்து வருடங்களாக ஒரே பாலின வாழ்க்கை வாழ்ந்து வரும் டூட்டி சந்த், நானும் எனது பார்ட்னரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறோம். இணைந்து வாழ முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம் என்பது தயக்கமின்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×