ஒடிசா ரெயில் விபத்து - இரவு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்ற மீட்புப் பணிகள்

விபத்தில் காயமடைந்த 800க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன.
ஒடிசா ரெயில் விபத்து - இரவு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்ற மீட்புப் பணிகள்
Published on

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒடிசாவின் பாலசோரில் ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்றன.

காயமடைந்த 800க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன.

30 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 700 பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com