search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி, எம்.எல்.ஏ. வீடுகளில் சி.பி.ஐ. சோதனை- டெல்லி, பீகார் உள்பட 9 இடங்களில் அதிரடி
    X

    ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி, எம்.எல்.ஏ. வீடுகளில் சி.பி.ஐ. சோதனை- டெல்லி, பீகார் உள்பட 9 இடங்களில் அதிரடி

    • ரெயில்வே பணி நியமனத்தில் நடந்த இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
    • ராஷ்டிரிய ஜனதாதள எம்.எல்.ஏ. கிரண்தேவி, மேல்சபை பிரேம்சந்த் குப்தா ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    ராஷ்டிரிய ஜனதாதள (ஆர்.ஜே.டி.) கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார்.

    அப்போது ரெயில்வேயில் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதாகவும், அவர்களிடம் இருந்து அதற்கு பிரதிபலனாக லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் நிலங்களை பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    ரெயில்வே பணி நியமனத்தில் நடந்த இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக அவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.1 கோடி பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இருந்தது. தேஜஸ்வி யாதவ், மிசா பாரதியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.

    இந்நிலையில் ரெயில்வே பணிக்கான நிலம் பெற்ற ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.

    பீகார், அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் 9 இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.

    ராஷ்டிரிய ஜனதாதள எம்.எல்.ஏ. கிரண்தேவி, மேல்சபை பிரேம்சந்த் குப்தா ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    Next Story
    ×