ராம நவமி விழா ஊர்வலம்: மேற்கு வங்காளத்தில் போலீஸ் பலத்த பாதுகாப்பு

ராமநவமி விழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கொல்கத்தாவின் புர்ரா பஜார், சிலிகுரி, பராசத் ஆகிய இடங்களில் பெரிய ஊர்வலங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ராம நவமி விழா ஊர்வலம்: மேற்கு வங்காளத்தில் போலீஸ் பலத்த பாதுகாப்பு
Published on

கொல்கத்தா:

ராம நவமி விழாவையொட்டி மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு இன்று சுமார் 5 ஆயிரம் ஊர்வலங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ராம நவமி விழாவின்போது சில இடங்களில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து தற்போது ராமநவமி விழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் புர்ரா பஜார், சிலிகுரி, பராசத் ஆகிய இடங்களில் பெரிய ஊர்வலங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com