search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
    X

    எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

    • நேற்று அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
    • இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    பாராளுமன்றத்தில் இருவர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். இது பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மக்களை சபாநாயகர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் நேற்று முதல் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 14 எம்.பி.க்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாநிலங்களவையில் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியதும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் அதே விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கூச்சலிட்டனர். அவைத் தலைவர்கள் சமாதானப்படுத்தியும் அவர்கள் கூச்சலை நிறுத்தவில்லை. இதனால் அவைகள் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவைத் தலைவர்கள் தன்னுடைய அறையில் சந்திக்குமாறு சேர்மன் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×