search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மல்யுத்தம் கற்றுக்கொண்ட ராகுல் காந்தி: ஏன் தெரியுமா?
    X

    மல்யுத்தம் கற்றுக்கொண்ட ராகுல் காந்தி: ஏன் தெரியுமா?

    • பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
    • தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை அவர் பிரதமருக்கு திருப்பி அளித்தார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை என்னால் ஏற்கமுடியாது. எனவே மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதேபோல், 2019-ம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா திருப்பி அளித்தார்.


    இந்நிலையில், அரியானாவில் உள்ள மல்யுத்த வீரரான வீரேந்தர் ஆர்யா அகாரா வீட்டுக்கு ராகுல் காந்தி இன்று சென்றார்.

    அங்கிருந்த மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்திக்கு மல்யுத்தம் செய்வது குறித்து பஜ்ரங் புனியா பயிற்சி அளித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×