பாராளுமன்ற விவாதத்திற்கு பிறகு குடும்பத்தினருடன் ஓட்டலில் உணவருந்தி மகிழ்ந்த ராகுல்

சோலே பதுரா மற்றும் பல வகையான உணவுகளை அவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.ராகுல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாராளுமன்ற விவாதத்திற்கு பிறகு குடும்பத்தினருடன் ஓட்டலில் உணவருந்தி மகிழ்ந்த ராகுல்
Published on

புதுடெல்லி:

அதானி விவகாரம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சைப் பேச்சுக்கான போராட்டம் என பல்வேறு சூடான நிகழ்வுகள் தற்போது நடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் நடந்து முடிந்தது.

இந்த சூடான நிகழ்வுகளில் பங்கேற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தாய் மற்றும் தங்கையுடன் தனியார் ஓட்டலில் மதிய உணவருந்தி மகிழ்ந்துள்ளார்.

தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியான நேரத்தை செலவிட டெல்லியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலுக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகள் மரியா வதேரா மற்றும் ராபர்ட் வதேராவின் தாயார் ஆகியோர் நேற்று சென்றனர். அந்த ஓட்டலின் சிறந்த உணவான சோலே பதுரா மற்றும் பல வகையான உணவுகளை அவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.

அந்த ஓட்டலில் சாப்பிட்டு மகிழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களை ராகுல் காந்தி `குவாலிட்டி உணவகத்தில் மதிய உணவு 'என குறிப்பிட்டு அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ராபர்ட் வதேரா பெரிய அளவிலான சோலே பதுராவை பரிமாறுவதும் , சோனியா காந்தி தன்முன்னே பஞ்சு போன்ற சோலே பதுரா இருப்பதை பார்த்து புன்னகைப்பதும் போல் உள்ள அவர்களது குடும்பத்தினரின் மகிழ்வான தருணங்களின் படங்கள் அதில் பதிவாகி உள்ளன.

குடும்பத்தோடு உள்ள படம் என்றாலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என 3 எம்.பி.க்கள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் சென்று மகிழ்ந்த குவாலிட்டி ஓட்டல் டெல்லியில் தனித்தன்மையுடன் விளங்கும் நீண்ட பாரம்பரியம் கொண்ட உணவகமாகும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com