search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவசாயிகள் போராட்டத்தில் சுப்கரண் சிங் மரணம்: கொலை வழக்காக பதிவு செய்தது பஞ்சாப் போலீஸ்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    விவசாயிகள் போராட்டத்தில் சுப்கரண் சிங் மரணம்: கொலை வழக்காக பதிவு செய்தது பஞ்சாப் போலீஸ்

    • பஞ்சாப்- அரியானா எல்லையில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான மோதலின்போது சுப்கரண் சிங் மரணம்.
    • அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் "டெல்லி சலோ" என்ற பெயரில் பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அரியானா, பஞ்சாப் மாநில எல்லைகள் மூடப்பட்டு, விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    கடந்த 21-ந்தேதி பஞ்சாப்- அரியானா எல்லை கனாரி பகுதியில் தடுப்புகளை தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது பஞ்சாப் எல்லைக்குள் புகுந்து அரியானா போலீசார் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.

    இதில் சுப்கரண் சிங் என்ற 21 வயது இளம் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அதேவேளையில் 12 பாதுகாப்பு போலீசாரும் காயம் அடைந்தனர்.

    சுப்கரண் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுப்கரண் சிங் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என அறிவித்தனர்.

    இந்த நிலையில் ஒருவாரம் கழித்து நேற்றிரவு போலீசார் கொலை வழக்கு உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரியானாவின் சிந்து மாவட்டத்தில் உள்ள கார்கி என்ற இடத்தில் சம்பவம் நடைபெற்றதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கனாரி ஜிந்து மாவட்டம் அருகில் உள்ளது. சுப்கரண் சிங் பதிண்டா பகுதியைச் சேர்ந்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுப்கரண் சிங் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியது. மேலும், அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

    விவசாயிகள் சங்கங்கள் டெல்லி சலோ பேரணியை தற்காலியமாக நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் எல்லையில் அமர்ந்துள்ளனர். இன்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×