search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை நடிகர்களுடன் ஒப்பிட்ட பிரியங்கா காந்தி
    X

    பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை நடிகர்களுடன் ஒப்பிட்ட பிரியங்கா காந்தி

    • பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜக. தலைவர்களை பிரியங்கா காந்தி நடிகர்களுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
    • இதையடுத்து, மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பிரியங்காவிற்கு கண்டனம் தெரிவித்தார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சியினர் அவதூறு பேசுவதாக நீலிக்கண்ணீர் வடித்த பிரதமர் மோடி, மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போதும் அதையே குறிப்பிட்டு பேசினார்.

    சல்மான்கான் நடித்த மேரா நாம் படத்தின் கதாபாத்திரத்தை கூறி அழுதார். மேரா நாம் என்ற படத்தின் பெயர், கதை மோடியை வைத்தே எடுக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது.

    முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் ஒரு சிறந்த நடிகர். நடிப்பில் அவர் அமிதாப் பச்சனையே மிஞ்சிவிடுவார். அவர் செய்யும் வேலைகள் நகைப்புக்குரியதாக இருக்கும்.

    மாநில உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ராவுக்கு சட்டம்-ஒழுங்கைப் பற்றி கவலை இல்லை. எந்தப் படத்தில், எந்த ஹீரோயின் என்ன உடை அணிந்து வந்தார் என்பதுதான் அவரது கவலை என காட்டமாக பேசியிருந்தார்.

    அதாவது பதான் படத்தில் தீபிகா படுகோனே காவிநிற உடை உடுத்தி வந்ததை கடுமையாக மிஸ்ரா விமர்சித்திருந்ததை குறிப்பிட்டு பிரியங்கா பேசியிருந்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், பிரியங்கா இவ்வளவு கீழ்த்தரமாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மக்களின் பிரச்சினைகள், வளர்ச்சி பணிகளை பற்றி பேசவேண்டும். தேர்தலில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது என கண்டனம் தெரிவித்தார்.

    Next Story
    ×