search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    46 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள்- ஜனாதிபதி வழங்கினார்
    X

    46 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள்- ஜனாதிபதி வழங்கினார்

    • தாய்மொழியில் கற்பித்தால் திறமை வளர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
    • தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

    புதுடெல்லி:

    தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட 46 ஆசிரியர்களுக்கும் தேசிய விருதுகளை வழங்கினார்.

    விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி முர்மு, தனது கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றதற்கு தனது பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். மேலும், தாய்மொழியில் கற்பித்தால் அறிவியல், இலக்கியம் மற்றும் சமூக அறிவியலில் திறமை வளர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

    விழாவில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

    Next Story
    ×