search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
    X

    ஆந்திராவில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

    • கர்னூல் நகரத்தில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் சத்திய நாராயணா என்ற போலீஸ்காரர் நேற்று பணியில் இருந்தார்.
    • தலையில் குண்டு பாய்ந்து சத்தியநாராயணா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கர்னூல் நகரத்தில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் சத்திய நாராயணா என்ற போலீஸ்காரர் நேற்று பணியில் இருந்தார்.

    குளியல் அறைக்கு சென்ற சத்தியநாராயணா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தனக்குத்தானே திடீரென நெற்றி பொட்டில் சுட்டுக் கொண்டார்.

    இதில் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். துப்பாக்கி சத்தம் கேட்ட அலுவலக ஊழியர்கள் குளியலறைக்கு சென்று பார்த்தபோது சத்தியநாராயணா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்திய நாராயணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்திய நாராயணா பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×