சபரிமலையில் காணாமல்போன ஐயப்ப பக்தர்களின் 102 செல்போன்கள் மீட்பு

தொலைந்து போன செல்போன்களை மீட்க பம்பை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். செல்போன்கள் கூரியர் மூலம் உரியவர்களுக்கு அனுப்பி வைக்க பம்பை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சபரிமலையில் காணாமல்போன ஐயப்ப பக்தர்களின் 102 செல்போன்கள் மீட்பு
Published on

திருவனந்தபுரம்:

சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். குறிப்பாக மண்டல மகர விளக்கு சீசன் காலங்களில் பக்தர்களில் வருகை அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் கூட்ட நெரிசல் உள்பட பல்வேறு காரணங்களால் பக்தர்கள் சிலர் சில நேரங்களில் தங்களது செல்போன் மற்றும் உடைமைகளை தவற விடுவது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் கடந்த மண்டல சீசன் முதல் இதுவரை ஐயப்ப பக்தர்களின் 230 செல்போன்கள் காணாமல் போனதாக பம்பை போலீசில் புகார் பெறப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொலைந்து போன செல்போன்களை மீட்க பம்பை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அந்தவகையில் இதுவரை 102 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த செல்போன்கள் கூரியர் மூலம் உரியவர்களுக்கு அனுப்பி வைக்க பம்பை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com