4067 ச.கி.மீ. பகுதியை சீனாவுக்கு தாரைவார்த்தவர் மோடி: முன்னாள் வெளியுறவு செயலாளர்

2013-ல் சீனா இந்தியாவின் 640 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது.உடனடியாக இந்தியா மற்றொரு எல்லையில் சீனா இடத்தை ஆக்கிரமித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
4067 ச.கி.மீ. பகுதியை சீனாவுக்கு தாரைவார்த்தவர் மோடி: முன்னாள் வெளியுறவு செயலாளர்
Published on

இந்தியா- சீனா எல்லையில் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டும் திடீரென இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இந்திய எல்லைக்குள் புகுந்த அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

அப்போது இருதரப்பு வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் அதிக இழப்பு ஏற்பட்டது. அதன்பின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தியது.

கல்வான் பள்ளத்தாக்கில் பல சதுர கிலோ மீட்டர் வரையிலான இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்ததாக இந்திய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இந்திய பிரதமர் ஒரு அங்குல நிலம் கூட சீன ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தெரிவித்ததை சீன பத்திரிகைள் பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டனர். இந்திய பிரதமர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இந்திய நிலத்தை தாரைவார்த்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண், எந்தவித போராட்டமின்றி இந்திய நிலத்தை தாரைவார்த்து விட்டடதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாக கேரள மாநில காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு செய்தியில் கூறியிருப்பதாவது:-

2013-ல் சீனா இந்தியாவின் 640 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது. உடனடி பதிலடியாக எல்லையின் மற்றொரு பகுதியில் நாம் சீனாவின் இடத்தை ஆக்கிரமித்தோம். இதனால் சீனா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.

அப்போது இரு தரப்பிலும் தங்களது பழைய இடத்திற்கு திரும்பிச் செல்ல ஒப்புக் கொள்ளப்பட்டது. எந்தவித போராட்டம் இன்றி 4067 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலத்தைர பிரதமர் மோடி சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டார்.

இவ்வாறு முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com