'மோடியின் குடும்பம்' என்பதை நீக்குமாறு பாஜகவினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நம் ஒரே குடும்பம் என்ற உறவு எப்போதும் வலிமையாகவும், உடைக்கப்படாமலும் இருக்கும்மோடி குடும்பம் உருவானது. ஊழல்வாதிகள் அனைவரும் அந்தக் குடும்பத்தின் அங்கமாகிவிட்டனர்
'மோடியின் குடும்பம்' என்பதை நீக்குமாறு பாஜகவினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on

பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என பொதுக்கூட்டத்தில் பேசும்போது விமர்சனம் செய்திருந்தார். இதனையொட்டி பா.ஜனதா தலைவர்கள் மோடியின் குடும்பம் என எக்ஸ் தளத்தில் தங்களது பெயருக்கு பின் குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்தனர்.

பாஜகவினரின் பெயருக்கு பின்னால் 'மோடியின் குடும்பம்' என சமூகவலைத்தளங்களில் வைத்திருப்பதை நீக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக தனது பெயருக்கு பின் 'மோடியின் குடும்பம்' சேர்த்தனர். நான் அதிலிருந்து நிறைய பலம் பெற்றேன்.

இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இது ஒரு சாதனையாகும், மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை அவர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து 'மோடியின் குடும்பம்' என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெயர்கள் மாறலாம். ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நம் ஒரே குடும்பம் என்ற உறவு எப்போதும் வலிமையாகவும், உடைக்கப்படாமலும் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

மோடியின் இந்த டுவீட் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், "மோடி குடும்பம் உருவானது. ஊழல்வாதிகள் அனைவரும் அந்தக் குடும்பத்தின் அங்கமாகிவிட்டனர்" என்று விமர்சித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com