சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி: இதுதான் காரணம்

தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் கணபதி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி: இதுதான் காரணம்
Published on

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய்.சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் இன்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்துகொண்டார்.

பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

X

Maalai Malar
www.maalaimalar.com