பிரதமர் மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு

இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கூறியவர்.மாலத்தீவு அதிபர் ஆனதும் இருநாட்டு உறவில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டது.
பிரதமர் மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு
Published on

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இந்தியா-மாலத்தீவு சிறப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வது! பிரதமர் மோடி மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை அன்புடன் வரவேற்றார். இந்த சந்திப்பு ஐதராபாத் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்தியா-மாலத்தீவு இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்வீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்பு மாலத்தீவு அதிபர் முய்சுவை வரவேற்றார். அப்போது பிரதமர் மோடி உடனிருந்தார்.

முகமது முய்வு மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றதும் இந்தியா- மாலத்தீவு இடையிலான உறவு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகின. மாலத்தீவு தேர்தலை இந்தியா அவுட் என்ற பிரசார வியூகத்துடன் தொடங்கினார்.

இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என்றார். அதன்படி இந்தியா ராணுவம் கடந்த மே மாதம் மாலத்தீவில் இருந்து வெளியேறியது.

பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு மந்திரி விமர்சித்ததில் இருந்து இருநாட்டு உறவு மிகவும் பாதித்தது. குறிப்பாக மாலத்தீவு சுற்றுலா மிகக்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. தற்போது இந்தியா விரோத நிலைப்பாட்டை குறைத்துள்ள முய்சு, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அழைத்து விடுத்துள்ளார்.

பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் மாலத்தீவிற்கு இந்தியா 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com