search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நேபாள நிலநடுக்கம் - பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நேபாள நிலநடுக்கம் - பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

    • நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
    • நிலநடுக்கத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு 6.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், நேபாள மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது. அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. எங்களுடைய எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×