

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா பாராளுமன்ற குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உள்துறை மந்திரி அமித் ஷா வந்துள்ளார். அதேபோல், பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, அமைச்சர்கள் சர்பானந்தா சோனாவால், பிரகலாத் சிங் பட்டேல், பூபேந்தர் யாதவ், இணையச்சர் முரளீதரன் உள்ளிட்டவர்கள் வந்தடைந்துள்ளனர்.
கூட்டம் பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன் நடைபெற இருக்கிறது.