search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் அரசை கவிழ்க்க கவர்னர் மூலம் சூழ்ச்சி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு
    X

    கேரளாவில் அரசை கவிழ்க்க கவர்னர் மூலம் சூழ்ச்சி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

    • கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் கவர்னருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.
    • 15-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்து உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும், மாநில கவர்னருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற அரசு முனைப்புகாட்டி வருகிறது.

    இந்த நிலையில் கவர்னரை கண்டித்து வருகிற 15-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்து உள்ளது.

    இந்தநிலையில், கேரளாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செயல்படுவதாக கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியிருந்தார். மேலும் பொது விவாதம் நடத்த தயார் என்றும், கவர்னர் மாளிகைக்கு வந்து பாருங்கள் எனவும் சவால் விடும் வகையில் கருத்துகளை கூறி இருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாததால், அவர்களது குதிரை பேரம் நடக்காததால், அரசியல் சாசனத்திற்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க கவர்னர் மூலம் சதி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×