search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
    X

    நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

    • சில வழக்குகள், மேற்கு வங்காளம் உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
    • நிலுவை வழக்குகள் குறித்து நீதிமன்றங்கள், வக்கீல்கள் அமைப்புகள் தீர்வு காணவேண்டும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவ்வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் 43 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றின் மேல் முறையீட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ரவீந்திரபட், அரவிந்த்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக வேதனையை வெளிப்படுத்தினர்.

    நாடு முழுவதும் நீதி மன்றங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை நாங்கள் வேதனையுடன் வெளிப்படுத்துகிறோம். சில வழக்குகள், மேற்கு வங்காளம் உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

    சட்ட செயல்முறை நத்தை வேகத்தில் நகர்ந்தால் மனுதாரர்கள் ஏமாற்றமடையலாம். அவர்கள் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்க 11 அம்சங்களை கொண்ட விரிவான வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்படுகிறது.

    நிலுவை வழக்குகள் குறித்து நீதிமன்றங்கள், வக்கீல்கள் அமைப்புகள் தீர்வு காணவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர். 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தீர்ப்பை கண்காணிக்கவும் ஐகோர்ட்டுக்கு 11 வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வழக்குகள் நிலுவையில் உள்ளதை கண்காணிக்க குழுக்களை அமைக்க ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழு 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை கண்காணிக்கும்.

    Next Story
    ×