என் மலர்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது என்றால், எப்படி வெற்றியாகும்: பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி..!
- பாகிஸ்தான் நம் முன் மண்டியிட தயாராக இருந்தது என்றால், நாம் ஏன் நிறுத்தினோம். யார் முன்னாள் சரணடைந்தீர்கள்.
- டொனால்டு டிரம்ப், 25 முறை வர்த்தகத்தை மேற்கொள்காட்டி இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன? என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியது. மழைக்கால கூட்டத் தொடரில் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி இன்று விவாரதம் நடைபெற்றது.
இந்த விவாத்தின்போது காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் பேசியதாவது:-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் தாக்கல் நடத்தலாம் என அவர்கள் (மத்திய அரசு) சொல்கிறார்கள். அப்படி சொல்லும்போது ஆபரேஷன் சிந்தூர் எப்படி வெற்றியாகும். நம்முடைய நோக்கம் போர் அல்ல என்று அவர்களே சொல்கிறார்கள். ஏன் அவ்வாறு இல்லை?. பிராந்தியத்தை பிடிப்பதற்கானது அல்லது என்றார்கள். ஏன் அவ்வாறு இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் திரும்ப எடுத்துக் கொள்வது எப்போது?. இப்போது இல்லை என்றால், எப்போது?. உங்களுடைய ஆட்சியின்போது, மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளன.
பாகிஸ்தான் நம் முன் மண்டியிட தயாராக இருந்தது என்றால், நாம் ஏன் நிறுத்தினோம். யார் முன்னாள் சரணடைந்தீர்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 25 முறை வர்த்தகத்தை மேற்கொள்காட்டி இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார். ஐந்து முதல் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். ஒரு போர் விமானத்தின் விலை பல கோடிகள். இதனால்தான் பாதுகாப்பு அமைச்சரிடம் நாங்கள் விவரத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். உண்மையைக் கேட்க நாட்டிற்கு தைரியம் இருக்கிறது, எத்தனை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
இந்த தகவல், இந்த உண்மை இந்திய குடிமக்களுக்கு மட்டுமானது அல்ல. இது ராணுவ வீரர்களுக்காகவும் முக்கியமானது. அவர்களிடமும் பொய் சொல்லப்படுகிறது. நம்மிடம் 35 ரபேல் விமானம் உள்ளது. இதில் சில விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால், அது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு என நினைக்கிறேன்.
இவ்வாறு கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.






