search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு
    X

    காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

    • குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.
    • தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை.

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    89வது கூட்டத்திற்கு குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.

    காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை செய்யப்பட உள்ளது.

    மேலும், ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×