மீண்டும் மத்திய மந்திரியாக பதவி ஏற்றார் நிர்மலா சீதாராமன்

பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மீண்டும் மத்திய மந்திரியாக பதவி ஏற்றார் நிர்மலா சீதாராமன்
Published on

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது.

கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டம் முடிந்த பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் மீண்டும் மத்திய மந்திரியாக பதிவியேற்று கொண்டார்.

இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3 வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com