search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கியது
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கியது

    • பிரமோற்சவத்தின் முக்கிய நாளான வருகிற 19-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது.
    • வருகிற 23-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஏழுமலையான் கோவிலில் அங்குரார் பனம் நடந்தது.

    இன்று இரவு 7 மணி அளவில் ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரமோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு வயது குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்து உள்ளது. இதனால் சாதாரண பக்தர்கள் அதிக அளவில் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    பிரமோற்சவத்தின் முக்கிய நாளான வருகிற 19-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருகிற 18-ந் தேதி மாலை முதல் 20-ந் தேதி காலை வரை மலைப்பாதைகளில் பைக்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன. வருகிற 23-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பதியில் நேற்று 67, 785 பேர் தரிசனம் செய்தனர்.21, 284 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 2.78 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×