மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற பயிற்சி வகுப்புகள் சிறந்தவை அல்ல: நாராயண மூர்த்தி

தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி மையங்கள் சிறந்த வழிமுறையாக இருக்காது.மாணவர்களை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது தவறான உதாரணம் என்றார்.
Narayana Murthy
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மாணவர்களை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது தவறான உதாரணம்.

பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் ஆசிரியரை கவனித்திருக்க மாட்டார்கள்.

பெற்றோர் ஆகிய நாமும் குழந்தைகளின் கல்விக்கு உதவமுடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, இதற்கு ஒரே தீர்வாக பயிற்சி மையங்கள் உள்ளன.

தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி வகுப்புகள் சிறந்த வழிமுறையாக இருக்காது.

வழக்கமான பள்ளி வகுப்புகளை கவனிக்கத் தவறியவர்களில் பெரும்பாலானோர் அங்கு செல்கின்றனர்.

உலக தரத்திலான கற்றல் முறை நமது மாணவர்களுக்கு கிடைப்பது முக்கியம்.

எப்படி கற்றுக்கொள்வது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்வதே கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com