search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்
    X

    நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்

    • நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
    • நாகாலாந்தில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என கருத்துக்கணிப்பு வெளியானது.

    கோஹிமா:

    வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்துக்கு நேற்றும் (27-ம் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 3 மாநில தேர்தல் முடிவுகளும் மார்ச் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, 3 மாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இரு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

    நாகாலாந்தில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என்றும், என்டிடிபி 38 - 48 தொகுதிகளிலும், என்பிஎஃப் 3 - 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 - 2 தொகுதிகளிலும், மற்றவை 5 - 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் படி, நாகாலாந்து சட்டசபை தொகுதிகளில் உள்ள 4 வாக்குச் சாவடிகளில் மார்ச் 1-ம் தேதி (நாளை) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி ஜூன்ஹிபோட்டோ சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள நியூ காலனி, சனீஷ் தொகுதியின் கீழ் பாங்க்ரி வீ. டிஷீட் சட்டமன்றத் தொகுதியின் கீழ் ஜபோகா கிராம வாக்குச் சாவடி மற்றும் தோனாக்யூ சட்டமன்றத் தொகுதியின் கீழ் பாஸ்தோ கிழக்குப் பகுதி ஆகியவற்றில் மறு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×