பணப்பட்டுவாடா புகார்- ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் உதவி கேட்ட பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை படை பறிமுதல் செய்ததுபாஜக வேட்பாளர் சுதாகர் மீது மதநாயக்கஹள்ளி காவல் நிலையத்தில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்
பணப்பட்டுவாடா புகார்- ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் உதவி கேட்ட பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு
Published on

பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை படை பறிமுதல் செய்தது

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை ஏப்ரல் 24 அன்று பறக்கும் படை பறிமுதல் செய்தது.

இதனையடுத்து பாஜக வேட்பாளர் சுதாகர் மீது மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் தேர்தல் அதிகாரி முனிஷ் முட்கலை பாஜக வேட்பாளர் சுதாகர் தொடர்புகொண்டு பேசியதாகவும் பிடிபட்ட பணத்தை விடுவிக்கும்படியும், வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி பணத்தை விடுவிக்க சுதாகர் உதவி கோரியதாகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி முனிஷ் மௌத்கில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து மதநாயக்கனஹள்ளி போலீசார் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com