search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குருவாயூர் கோவிலில் வாழைப்பழத்தை துலாபாரமாக வழங்கிய கேரள கவர்னர்
    X

    கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் துலாபாரமாக எடைக்கு எடை வாழைப்பழம் வழங்கியபோது எடுத்த படம்.

    குருவாயூர் கோவிலில் வாழைப்பழத்தை துலாபாரமாக வழங்கிய கேரள கவர்னர்

    • நான் கேரள ஸ்டோரி திரைப்படத்தை பார்க்கவில்லை.
    • படத்தின் கருப்பொருள் உண்மை சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று முன்தினம் குருவாயூர் சென்றார். அங்கு மாடம்பு ஸ்மிருதி வர்ஷம் 23 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்த விரும்புவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கூறினார்.

    அதைத்தொடர்ந்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கோவிலுக்கு வெளியே நடத்தப்படும் துலாபாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவிலின் கிழக்கு நடைபந்தலில் அவருடைய எடைக்கு எடை (83 கிலோ) கதலிப்பழம் துலாபாரமாக வழங்கினார். அதற்கான தொகை ரூ.4 ஆயிரத்து 250-ஐ கவர்னர் ஆரிப் முகமது கான் கோவிலுக்கு செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக கிழக்கு கோபுரத்தின் வெளி நடையில் இருந்து குருவாயூரப்பனை நோக்கி வழிபாடு செய்தார்.

    பின்னர் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில் தரிசனம் மூலம் கிடைத்த ஆன்மிக அனுபவம் குறித்து வார்த்தைகள் மூலம் விவரிக்க முடியாது.

    நான் கேரள ஸ்டோரி திரைப்படத்தை பார்க்கவில்லை. ஆதலால் அந்த சினிமா குறித்தான எந்த விவாதத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை பார்த்து இருக்கலாம். ஆதலால் அவர் கருத்து தெரிவித்து இருப்பார். இப்படம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளி வந்துள்ள நிலையில், படத்தின் கருப்பொருள் உண்மை சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×