search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கவர்னர் ஆரிப் முகமது கான் நடத்தும் கிறிஸ்துமஸ் விருந்தை நிராகரித்த பினராயி விஜயன்
    X

    கேரள கவர்னர் - பினராயி விஜயன்

    கவர்னர் ஆரிப் முகமது கான் நடத்தும் கிறிஸ்துமஸ் விருந்தை நிராகரித்த பினராயி விஜயன்

    • திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஏற்பாடு செய்தார்.
    • கவர்னர் நடத்த இருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் யாரும் பங்கேற்க போவதில்லை என்று தெரிகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஏற்பாடு செய்தார்.

    கடந்த ஆண்டு நடந்த கிறிஸ்துஸ் விழாவில் மத தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இவ்விழாவில் பங்கேற்க முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள், எதிர்கட்சி தலைவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் அழைப்பு அனுப்பி இருந்தார்.

    கவர்னர் நடத்த இருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் யாரும் பங்கேற்க போவதில்லை என்று தெரிகிறது. இதுபோல கேரள எதிர்கட்சி தலைவர் சதீசனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அன்றைய தினம் அவர் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கவர்னரின் அழைப்பை கேரள மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×