ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழு பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் மக்களவை, மாநில சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம்
Published on

திருவனந்தபுரம்:

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழு பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன்மூலம் மக்களவை, மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

மக்களவை, சட்டசபைக்கு முதல் கட்டமாகவும், அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேரள சட்டசபையில் முதல் மந்திரி பினராயி விஜயன் சார்பில் மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி எம்.பி. ராஜேஷ் தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தகர்த்துவிடும். இந்தத் திட்டம் நாட்டில் உள்ள பல்வேறு மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலத்தை குறைக்கவும் வழிவகுக்கும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com