என் மலர்
இந்தியா

பிரச்சனை நிறைந்த செங்கடல்: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் பயணம்
- வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஈரான் செல்கிறார்.
- ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ஈரான் செல்கிறார். நாளை மறுதினம் அங்கு ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
செங்கடலின் நிலைமை உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே ஹவுதி போராளிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






