எமர்ஜன்சி காலத்தில் இருந்தே இந்தியர்கள் அதற்கு கவனம் செலுத்தியதில்லை - நாராயண மூர்த்தி

மோதிலால் நேரு இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.சீனா போன்ற நடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் தனிநபர் நில இருப்பு அதிகமாக உள்ளது.”
எமர்ஜன்சி காலத்தில் இருந்தே இந்தியர்கள் அதற்கு கவனம் செலுத்தியதில்லை - நாராயண மூர்த்தி
Published on

சர்வதேச தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தி, இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவது பற்றி பேசியுள்ளார்.

மோதிலால் நேரு இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "இந்தியா மக்கள் தொகை, தனிநபர் நில இருப்பு மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது."

"இந்த அவசர காலக்கட்டத்தில் மக்கள் தொகை கட்டுபாட்டை பற்றி நாம் கவலைப்படுவது இல்லை. இதே போன்ற சூழ்நிலை இன்னும் சில வருடங்களுக்கு தொடர்ந்தால், இந்தியாவில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் தனிநபர் நில இருப்பு அதிகமாக உள்ளது."

"இதை கருத்தில் கொண்டு அனைவரும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இது நம் அனைவரின் கடமை மற்றும் பொறுப்பும் கூட. ஒரு தலைமுறை இவ்வாறு தியாகம் செய்தால் தான் அடுத்து வரும் தலைமுறையின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். என பெற்றோர்கள், சொந்தங்கள், ஆசிரியர்கள் செய்த தியாகத்தினால் தான் நான் இன்று உங்கள் முன் சிறப்பு விருந்தினராக நிற்கிறேன்," என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com